துறையூர் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல்

4455பார்த்தது
விடுமுறை நாட்களை ஒட்டி துறையூர் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றதை ஒட்டி வெளியூரில் வசிக்கும் துறையூர் மக்கள் வாக்களிப்பதற்காக துறையூர் பகுதிக்கு வந்திருந்தனர். அவர்கள் மீண்டும் தாங்கள் பணிபுரியும் பெருநகரங்களுக்கு செல்வதால் துறையூர் - திருச்சி சாலை, ஆத்தூர் சாலை, பெரிய கடை வீதி, பாலக்கரை, முசிறி பிரிவு சாலை ஆகிய பகுதிகளில் வாகனங்கள் அதிகமாக வந்ததால் கடுமையான போக்குவரத்து எரிச்சல் ஏற்பட்டது.

காலை 9 மணி முதல் தற்போது இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் நீடித்து வருகிறது. இதனால் கூடுதலாக போக்குவரத்து காவலர்களை நியமித்து போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி