சமீபத்தில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வெறிச்சோடிய சாலையில் ஒரு வயதான பெண் தனியாக நடந்து செல்வதை இரண்டு திருடர்கள் கவனித்தனர். இருவரும் அவர் அருகே ஸ்கூட்டியில் சென்று அவரது பர்ஸைப் பிடித்து இழுத்தனர். மூதாட்டி பர்ஸை இறுக பிடித்துக்கொண்டதால் அவரை தரதரவென வண்டியிலேயே சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டார். பின்னர் அவர்கள் தப்பிச் செல்லவே, கீழே விழுந்த மூதாட்டி படுகாயமடைந்தார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.