பச்சைமலை மாணவிக்கு லேப்டாப் வழங்கிய எம்பி அருண்நேரு

79பார்த்தது
திருச்சி மாவட்டம் துறையூர் பச்சமலை பகுதியில் ஜே இஇ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண்நேரு லேப்டாப் வழங்கி கௌரவித்தார்.

துறையூர் பச்சமலை சின்ன இலுப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரோகினி இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயின்று பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றார் இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஜெஇஇ தேர்வில் 73. 8 மதிப்பெண் பெற்று பழங்குடியின மாணவிகளில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார். இதைத்தொடர்ந்து திருச்சி என் ஐ டி கல்லூரியில் கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் இடம் கிடைத்தது. அவரை கௌரவிக்கும் விதமாக பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு அவர்கள் இன்று சின்ன இலுப்பூர் சென்று அவர் பயின்ற பள்ளியில் அவரை சந்தித்து அவருக்கு லேப்டாப் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார்.

தொடர்புடைய செய்தி