பாலியல் தொல்லை.. விடிய விடிய போராட்டம் நடத்திய மாணவர்கள்

54பார்த்தது
பாலியல் தொல்லை.. விடிய விடிய போராட்டம் நடத்திய மாணவர்கள்
திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக விடுதி அறையில் தனியாக இருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒப்பந்த ஊழியர் கதிரேசனை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து விடுதி காப்பாளரிடம் புகார் அளித்ததற்கு, அவர் மாணவிகளின் ஆடை குறித்து விமர்சனம் செய்ததாக தெரிகிறது. இதனால், காப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் என்ஐடி இயக்குநர் அகிலாவின் வீட்டை முற்றுகையிட்டு விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி