துறையூர் காசி விஸ்வநாதர் சுவாமி ஆலய கும்பாபிஷேக விழா..

84பார்த்தது
திருச்சி மாவட்டம் துறையூர் பெரிய ஏரிக்கரை மூங்கில் தெப்பக்குளம் பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ காசி விஸ்வநாதர் சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. மிதுன லக்கினத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் துறையூர் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிவன் அருள் பெற்றனர். முன்னதாக ஞாயிற்றுக்கிழமை அன்று பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு விநாயகர் பூஜை அணுங்கை மகா கணபதி ஹோமம் மகாலட்சுமி கோமம் நவகிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு இன்று மிதுன லக்னத்தில் யாக வேள்வியில் வைத்து பூஜிக்கப்பட்ட கங்கை நீரைக் கொண்டு சிவாச்சாரியார்களால் கோபுர விமானம் மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் பிரசாதமாக அன்னதானம் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி