துறையூரில் நேற்று 63 மில்லி மீட்டர் மழை பதிவு

75பார்த்தது
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் கடந்த நான்கு தினங்களாகவே தினமும் சாரல் மழை பொழிந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை முதலே வெயில் அடித்ததை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை வெளுத்து வாங்கியது. இதில் துறையூர் பகுதியில் 63 மில்லி மீட்டர், கொப்பம்பட்டி பகுதியில் 41 மில்லி மீட்டரும், பச்சைமலை தென்பாநாடு பகுதியில் 40 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி இருப்பதாக திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி