அவதூறு வழக்கு - எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன்

51பார்த்தது
அவதூறு வழக்கு - எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன்
கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. கோவையில் செய்தியாளர் சந்திப்பின்போது எடப்பாடி பழனிசாமி தன்னைப் பற்றி அவதூறாக பேசியதாக கே.சி.பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த கோவை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம், வரும் 15-ம் தேதி எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்தி