திருச்சி: வாக்கு எண்ணும் மையத்திற்கு சீல் வைப்பு

2594பார்த்தது
திருச்சி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்தில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

தமிழகத்தில் நேற்று ஒரே கட்டமாக 18வது நாடாளுமன்ற தேர்தல் காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணிக்கு முடிவுற்றது. இதனை தொடர்ந்து வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட் மின்னணு வாக்கு இயந்திரங்கள் விவி பட் சீல் வைக்கப்பட்டு வாக்குச்சாவடியில் இருந்து வாக்கு எண்ணிக்கை மையமான ஜமால் முகமது கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு கட்டுப்பாட்டு இயந்திர அறையில் வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அங்கு தேர்தல் பொது பார்வையாளர் தினேஷ்குமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரதீப்குமார் வாக்குப்பட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையை அனைத்து கட்சியினர் முன்பு சீல் வைத்தார்.

தொடர்புடைய செய்தி