இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாப்போம்‌ மாநாடு

148பார்த்தது
இந்திய ஒற்றுமை இயக்கம் மற்றும தமிழ்நாடு குடிமைச் சமூக அமைப்புகள், மக்கள் இயக்கங்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது தொடர்பாக "இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாப்போம்" என்ற தலைப்பில் மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருேக உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய ஒற்றுமை இயக்கத்தின் தேசிய வழிகாட்டு குழு உறுப்பினர் கிறிஸ்டினாசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர் யோகேந்திர யாதவ், விடுதலை சிறுத்தை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பொதுச் செயலாளருமான ரவிக்குமார், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, வழக்கறிஞர், ம. கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், ஹென்றி திபேன், ‌ சுப. உதயகுமார், தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாண்டியன், உள்ளிட்ட பலர் கொண்டனர். மாநாட்டில் அரசியல் சட்டத்தை சனநாயக அமைப்பு முறையை சமூக நீதியை பன்முகத்தன்மையை மனித உரிமைகளை தகர்க்கும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இவர்களிடமிருந்து இந்தியாவை மீட்டெடுக்கும் வகையில் பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் தேசிய பேரவை குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜன், மாநாட்டு குழு உறுப்பினர் எரோனிமஸ் உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 300க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.