கல்லூரியில் தகராறு மூவர் கைது

562பார்த்தது
முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது இதில் முதலில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள முதலாம் ஆண்டு மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது இதை அடுத்து முதலாம் ஆண்டு மாணவர்களின் உறவினர்கள் உருட்டு கட்டைகளுடன் கல்லூரி வளாகத்தில் மூன்றாம் ஆண்டு மாணவர்களை தாக்கி உள்ளனர். இதை அடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் சதீஷ்குமார் உதயா மற்றும் சுதாகர் ஆகிய முதலாம் ஆண்டு மூன்று மாணவர்களை கல்லூரியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்துள்ளனர். இதில் இரு தரப்பைச் சேர்ந்த எட்டு பேர் மட்டும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் புகாரின் பேரில் சிந்தம் பட்டியைச் சேர்ந்த யுவராஜ் வயது 20 அயித்தாம்பட்டியைச் சேர்ந்த நிஷாந்த் வயது 20 மற்றும் சந்திரகுமார் வயது 20 ஆகிய முன்னாள் மாணவர்களை கைது செய்துள்ளனர். மேலும் வரலாற்றுத் துறை மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் ஒரு வார காலத்திற்கு தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி