முசிறியில் வழக்கறிஞர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

553பார்த்தது
முசிறியில் வழக்கறிஞர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
முசிறியில் வழக்கறிஞர் சங்க தேர்தல்

திருச்சி மாவட்டம் முசிறி ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் அலுவலர் துரைச்செல்வம், செந்தில் ஆகியோர் தேர்தல் ஆணையராக செயல்பட்டு தேர்தல் நடத்தினர். இதில் தலைவருக்கு வழக்கறிஞர் மருதையாவும் , வழக்கறிஞர் சந்திரசேகர் போட்டியிட்டனர். மொத்தம் உள்ள 143 வாக்குகளில் 134 வாக்குகள் பதிவானது. தலைவருக்கு போட்டியிட்டவர்களில் 91 வாக்குகள் பெற்று வழக்கறிஞர் மருதையா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராக வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன், பொருளாளராக ஆர் யோகராஜ், இணைச் செயலாளராக பி சுகுமார், துணைத்தலைவராக கார்த்திகேயன் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மூத்த வழக்கறிஞர்கள் பாஸ்கர் , ரத்தினவேல், செங்குட்டுவன், சந்திரசேகரன், சுரேஷ்குமார் அரசு வழக்கறிஞர் சப்தரிசி, எம். வி. மனோகரன், பாபு , செந்தில்குமார் விமல்ராஜ், முத்துசெல்வன் மற்றும் முசிறி பார் கவுன்சில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற அனைவருக்கும் சக வழக்கறிஞர்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி