திருச்சியில் மணல் குவாரிகளை திறக்க கோரிக்கை

74பார்த்தது
திருச்சியில் மணல் குவாரிகளை திறக்க கோரிக்கை
மூடப்பட்ட மணல் குவாரிகளை உடனே திறக்க கோரி மணல் லாரி உரிமையாளர்கள் திருச்சி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு.

தமிழ்நாடு அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் உயர் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து சங்க தலைவர் பாபநாசம் வேலு தலைமையில்
துணைத் தலைவர் கடலூர் சாகுல் ஹமீது, செயலாளர் தம்புடு (எ) கிருஷ்ணமூர்த்தி துணை செயலாளர் விழுப்புரம் சங்கர்உள்ளிட்ட நிர்வாகிகள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர் அப்போது அவர்கள் கூறியதாவது: -

தமிழகம் முழுவதும் இயங்கி வந்த அரசு மணல் குவாரி மற்றும் கிடங்குகளில் முறைகேடு நடந்துள்ளதாக 12. 09. 2023 அன்று அமலாக்கத் துறையினர் சோதனையிட்டதால் அனைத்து அரசு மணல் குவாரிகளும், கிடங்குகளும் இயக்கப்படாமல் இன்று வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மணல் லோடு எடுப்பதற்கு என்று வடிவமைக்கப்பட்ட சுமார் 20, 000 க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் 5, 000க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளும் இயக்கப்படாமல் வேலை வாய்ப்பை இழந்துள்ளது.
இதனால் எங்களது வாழ்வாதாரம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மணல் குவாரி இயங்காததால் அரசு மற்றும் தனியார் கட்டுமானப் பணிகளுக்கு மணல் தட்டுபாடு ஏற்பட்டுத்தலால் உடனடியாக நடவடிக்கை எடுத்து மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி