தென்னிந்திய பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை, விருதுநகர், திருப்பூர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.