“நாளை தமிழகம் வருகிறேன்” - பிரதமர் மோடி தமிழில் பதிவு

85பார்த்தது
“நாளை தமிழகம் வருகிறேன்” - பிரதமர் மோடி தமிழில் பதிவு
பிரதமர் மோடி தனது ‘X’ தளத்தில் தமிழ் மொழியில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “நாளை புனிதமான ராம நவமி நாளில், தமிழ்நாட்டின் எனது சகோதர சகோதரிகளுடன் சேர்ந்திருப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். புதிய பாம்பன் ரயில் பாலம் திறந்து வைக்கப்படவுள்ளது. ஸ்ரீ அருள்மிகு ராமநாதசுவாமி ஆலயத்தில் நான் பிரார்த்தனை நடத்தவுள்ளேன். ரூ 8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளும் தொடங்கி வைக்கப்படும் அல்லது அடிக்கல் நாட்டப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி