நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை இந்தியா-இலங்கை இடையே 2023 அக்டோபரில் 'செரியாபாணி' என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. ஆனால், வடகிழக்கு பருவமழை மற்றும் பல காரணங்களால் அதே மாதம் 23ஆம் தேதி முதல் அந்த கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் சுபம் என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகையிலிருந்து காங்கேசன் துறைக்கு கப்பல் இயக்க முடிவு செய்தது. இந்நிலையில் மீண்டும் கப்பல் சேவை வரும் 22ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.