மணப்பாறை - Manapparai

திருச்சி: காதல் ஜோடி முசிறி மகளிர் போலீசில் தஞ்சம்

திருச்சி: காதல் ஜோடி முசிறி மகளிர் போலீசில் தஞ்சம்

திருச்சி வாழவந்தான் கோட்டையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் கந்தலிங்கம் இவரது மகள் துலியந்தனி நேற்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிந்து துலியந்தனியை தேடி வந்தனர்.  இந்நிலையில் அதே முகாமை சேர்ந்த சிவா என்பவரது மகனான ருத்ரன் என்கிற மணிகண்டனை காதலித்ததும், பின்னர் பெட்ரோல் எதிர்ப்பை மீறி இருவரும் முசிறியில் உள்ள கோவில் திருமணம் செய்து கொண்டு தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி முசிறி மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்ததும் தெரியவந்தது. இவர்களிடம் விசாரணை நடத்திய மகளிர் போலீசார் இருவரும் மேஜர் என்பதால் துவாக்குடி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்து அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு இருவரையும் போலீசார் அனுப்பி வைத்தனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా