நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

66பார்த்தது
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த F. கீழையூர் ஊராட்சியில் சாக்கடையை தூய்மை படுத்தாத காரணமாக சாக்கடை நீர் தேங்கி குளம் போல காட்சி அளிக்கிறது. இவ்வாறு தேங்கியுள்ள சாக்கடை நீரால் கொசுக்கள் பெருகி நோய் தொற்று பரவும் அபாய நிலையில் உள்ளது. இது குறித்து அறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் இன்று கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி