திருச்சி: பா. ஜ. க. கூட்டத்தில் செய்தியாளர்கள் மீது தாக்குதல்

77பார்த்தது
மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய கல்விக் கொள்கையை விளக்கியும், அதனை தமிழ்நாட்டில் அமல்படுத்த வலியுறுத்தியும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசை கண்டித்தும், திருச்சி மன்னார்புரத்தில் உள்ள ராணுவ மைதானத்தில் பாஜக சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. தேசிய கல்விக் கொள்கை பற்றி பொதுமக்களிடமும், பள்ளி - கல்லூரி மாணவர்களிடையேயும் விளக்கும் வகையில் இப்பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கண்டனப் பேருரையாற்றினார்.

கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதும் பொதுக்கூட்டத்தில் முக்கிய தலைவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது வந்திருந்தவர்கள் கலையை தொடங்கினர். சேர்கள் காலியாக இருந்தது இதனை பார்த்த திருச்சி (தினகரன்) செய்திதாளில் பணிபுரியும் புகைப்பட கலைஞர் சுந்தர் என்பவர் புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது. அதனை பார்த்த பாஜகவினர் அவரை தாக்கியுள்ளனர். புகைப்பட கலைஞர் சுந்தரை காப்பாற்ற முற்பட்ட (சன் டிவி) தொலைக்காட்சி செய்தியாளர் இஸ்லாம் என்பவரும் தாக்கப்பட்டுள்ளார். தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பத்திரிகையாளர்கள் தொடர்ந்து குரல் எழுப்பியதை தொடர்ந்து இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி