திமுகவை கண்டித்து அதிமுக சார்பில் துண்டு பிரசுரம் விநியோகம்

56பார்த்தது
திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் திமுக அரசை
கண்டித்து துண்டு பிரசுரங்களை விநியோகம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் "திமுக அரசின் போதைப்பொருள் விற்பனை, கள்ளச்சாராய மரணங்களுக்கு கண்டனம் தெரிவித்தும், கள்ளச்சாராய மரணங்களுக்கு சிபிஐ விசாரணை நடத்தவும், போதை பொருட்களுக்கு எதிரான போரில் அனைவரும் ஒன்றிணைவோம்" என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வானது அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்பியுமான ப. குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மணப்பாறை நகர செயலாளர் பவுன் M, ராமமூர்த்தி அவர்களும் சோனா L, எத்திராஜ் MC. சாய் D. சுரேஷ்குமார் மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி