
சமயபுரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம்
சமயபுரம் புள்ளம்பாடி கால்வாய் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று இருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் வாசு அளித்த தகவலின் பெயரில் சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.