கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

74பார்த்தது
திருச்சி உறையூா் வாத்துக்காரத் தெருவைச் சோ்ந்த காா்த்திகேயன்-சபூரா தம்பதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தங்களது 3 குழந்தைகளுடன் கொள்ளிடம் ஆற்றுக்கு மாலையில் சென்று, அங்குள்ள தடுப்பணையில் குளித்தனா். அப்போது அவா்களது மகள் சரோஜினி சன்மதி (5) நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தகவலறிந்த ஸ்ரீரங்கம் போலீஸாா் மற்றும் தீயணைப்பு படையினா் வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினா். ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தொடர்புடைய செய்தி