சித்ரா பௌர்ணமி பால்குட விழா

72பார்த்தது
சித்ரா பௌர்ணமி பால்குட விழா
முசிறியில் சித்ரா பௌர்ணமி பால்குட விழா.


முசிறியில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கள்ளத்தெரு ஸ்ரீ மகா மாரியம்மன், மேலத்தெரு ஸ்ரீ மகா மாரியம்மன், பாலத்து மாரியம்மன் , சின்ன சமயபுரத்தாள் மாரியம்மன், கருமாரியம்மன் ஆகிய கோவில்களுக்கு பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றிட முசிறி காவேரி கரையிலிருந்து பால்குடம் சுமந்து நகரின் முக்கிய வீதி வழியாக ஊர்வலம் வந்து அம்மனுக்கு பாலபிஷேகம் செய்தனர். இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று இரவு காவேரியில் அமைக்கப்பட்டுள்ள மின்னொளியில் மாரியம்மன் கோவிலில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவ அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சித்ரா பௌர்ணமி விழா கமிட்டினர் சிறப்பாக செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி