திருச்செந்தூர் கோவிலில் நாளை ஆனி வருசாபிஷேகம்!

57பார்த்தது
திருச்செந்தூர் கோவிலில் நாளை ஆனி வருசாபிஷேகம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருசாபிஷேகம் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.

இதுகுறித்து கோவில் இணை ஆணையர் கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருசாபிஷேகம் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 4. 30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது.

பின்னர் கோவில் மகாமண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானை அம்பாள் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. குமரவிடங்க பெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்திற்கும், பெருமாள் சன்னதியில் பெருமாள் கும்பத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட கும்பங்கள் கோவில் விமானதளத்திற்கு கொண்டு வரப்பட்டு காலை 9. 30 மணிக்கு மேல் 10. 30 மணிக்குள் மூலவர், சண்முகர், பெருமாள் ஆகிய விமான கலசத்திற்கு வருசாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து வள்ளி, தெய்வானை அம்பாள் விமான கலசத்திற்கு வருசாபிஷேகம் நடைபெறும்.

மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமானும், வள்ளி அம்பாளும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி