திருவைகுண்டம் - Srivaikuntam

தூத்துக்குடி: இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; நடத்துநர் கைது

தூத்துக்குடி: இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; நடத்துநர் கைது

செய்துங்கநல்லூர் அருகே அரசுப் பேருந்தில் பயணித்த பெண்ணுக்கு நள்ளிரவில் பாலியல் தொல்லை அளித்த நடத்துநரை போலீசார் கைது செய்தனர். கோவையில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு பேருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. இதில், நடத்துநராக கோவையைச் சேர்ந்த மகாலிங்கம் (43) பணியில் இருந்தார். பேருந்தில் தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 25 வயது பெண் பயணம் செய்தார். நள்ளிரவு நேரத்தில் அந்தப் பெண்ணிடம், நடத்துநர் பாலியல் தொந்தரவு செய்தார். இதுகுறித்து அந்தப் பெண் தனது உறவினர்களுக்கு தகவல் அளித்தார். இந்நிலையில் பேருந்து திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு நேற்று அதிகாலை வந்தபோது, பெண்ணின் உறவினர்கள் சேர்ந்து நடத்துநர் மகாலிங்கத்தைப் பிடித்து புதிய பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மகாலிங்கத்தை கைது செய்தனர்.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా