வல்லநாடு அருகே காரை ஓட்டிவந்தபோது, தொழிலதிபர் திடீரென மயங்கி விழுந்து இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி சாந்தி நகரை சேர்ந்தவர் அழகு பாண்டியன் மகன் சுரேஷ் (52), தொழிலதிபரான இவருக்கு கீதா என்ற மனைவியும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் இவர் நேற்று வல்லநாட்டில் உள்ள ஒரு ஜோதிடரிடம் ஜாதகம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். அங்கு ஜாதகம் பார்த்துவிட்டு மீண்டும் வல்லநாட்டில் இருந்து திருநெல்வேலிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
காரை சுரேஷ் ஓட்டி வந்துள்ளார். வல்லநாடு பாலம் வந்தபோது சுரேஷ் திடீரென நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு காருக்குள் மயங்கிவிட்டாராம். இதையடுத்து அவரது மனைவி 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து முறப்பநாடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.