துப்பாக்கி சுடும் போட்டி: நகர காவல் உதவி எஸ்பி முதலிடம்!

77பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் நேற்று (22. 07. 2024) மற்றும் இன்று (23. 07. 2024) ஆகிய இரண்டு நாட்கள் திருநெல்வேலி சரக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும்போட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்  முன்னிலையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர்  பிரவேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.


இப்போட்டியில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர்  பிரவேஷ் குமார், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எல். பாலாஜி சரவணன்  உட்பட திருநெல்வேலி சரகத்தில் பணிபுரியும் 5 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 3 காவல் உதவி கண்காணிப்பாளர்கள், 9 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 3 திருநெல்வேலி மாநகர உதவி ஆணையர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த 3 உதவி தளவாய்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதில் இன்சாஸ் (Insas) ரக துப்பாக்கி சுடும் பிரிவுக்கான போட்டியில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர்  பிரவேஷ் குமார் முதலிடத்தையும், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர்  கேல்கர் சுப்ரமண்ய பால்ச்சந்திரா 2வது இடத்தையும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12வது பட்டாலியன் உதவி தளவாய்  ரவி  3வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.

தொடர்புடைய செய்தி