பொதுமக்களிடம் மேயர் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

83பார்த்தது
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டல மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது அந்த வகையில் தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற இந்த மக்கள் குறை தீர்க்கும் முகாம் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்

தெற்கு மண்டலத்திற்குட்பட்ட 15 வார்டுகளை சேர்ந்த
பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டு சொத்து வரி நிர்ணயம், சொத்துவரி பெயர் மாற்றம், திருத்தங்கள், புதிய குடிநீர் இணைப்பு, தண்ணீர் கட்டண பெயர் மாற்றம், தண்ணீர் உபயோக கட்டண விகிதங்கள் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பொதுச் சுகாதாரம், உரிமை ஆணை கட்டணங்கள், தொழில்வரி, உள்ளிட்ட மாநகராட்சி சேவை குறித்து கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள் உடனே தீர்வு காணக்கூடிய மனுக்களுக்கு உடனே தீர்வு காணும் பணிகளும் நடைபெற்றன

இந்த கூட்டத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு அதற்கு தீர்வு காண நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன

இந்த கூட்டத்தில் மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி