தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழை

70பார்த்தது
தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழை
தமிழ்நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று (செப்.25) இரவு 7 மணி வரை, ஏழு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருப்பூர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளது. சென்னையின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி