புகைப்படக் கண்காட்சி கனிமொழி எம்பி திறந்து வைத்தார்

58பார்த்தது
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் 5வது புத்தக கண்காட்சி கடந்த 3ஆம் தேதி துவங்கிய நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தின் பெருமைகளையும் அதன் வளங்களையும் மண் சார்ந்த கலைகளையும் புகைப்படம் வழியாக கொண்டு வரும் வகையில் புகைப்பட போட்டிகள் நடைபெற்றது.

இந்த புகைப்பட போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் புகைப்படங்கள் புகைப்படக் கண்காட்சியாக இந்த புத்தக கண்காட்சி வளாகத்தில் அரங்க அமைக்கப்பட்டு அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புகைப்பட கண்காட்சி துவக்க விழா இன்று நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி கருணாநிதி எம்பி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோ கலந்து கொண்டு புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த புகைப்படங்களை கண்டு ரசித்தனர்.

தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் இந்த புகைப்பட கண்காட்சியை கண்டு களித்தனர்.


இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி