அரசு பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை: கால அவகாசம் நீட்டிப்பு

59பார்த்தது
அரசு பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை: கால அவகாசம் நீட்டிப்பு
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2024-2025-ஆம் கல்வியாண்டிற்கான நேரடி இரண்டாமாண்டு / முதலாமாண்டு முழுநேரம் மற்றும் பகுதிநேரம் சேர்க்கை விண்ணப்பபதிவு கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2024-2025-ஆம் கல்வியாண்டிற்கான நேரடி இரண்டாமாண்டு சேர்க்கை (பிளஸ்-2 தேர்ச்சி அல்லது ஐ. டி. ஐ தேர்ச்சி ) விண்ணப்பத்தினை https: //www. tnpoly. in என்ற இணையதள முகவரியில் 27. 09. 2024 வரை விண்ணப்பிக்கலாம்.

இதில் மாணவ / மாணவிகள் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் அல்லது ஐ. டி. ஐ மதிப்பெண் சான்றிதழ். சாதிசான்றிதழ், மற்றும் விண்ணப்பத்தார் புகைப்படம் ஆகியவற்றை தேவையான அளவுகளில் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளவாறு பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவியர்கள் முதலாமாண்டு சேர்க்கை பெறலாம்.

முதலாமாண்டு முழுநேரம் மற்றும் பகுதிநேரம் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு இணையதளம் வாயிலாக 27. 09. 2024 வiர் விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்இ சாதி சான்றிதழ், சிறப்பு பிரிவினர் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ் மற்றும் இதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ. 150/- ஆகும். SC/ST மாணவ / மாணவியர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி