ரைஸ் மில்லில் ரேஷன் அரிசி பறிமுதல்

57பார்த்தது
ரைஸ் மில்லில் ரேஷன் அரிசி பறிமுதல்
தூத்துக்குடியில் ரைஸ் மில்லில் பதுக்கிய 106 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

தூத்துக்குடியில் அண்ணா நகர் 5வது தெருவில் உள்ள ஒரு ரைஸ் மில்லில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ஹரி கண்ணன் மற்றும் போலீசார் நேற்று (செப்.,27) சோதனை நடத்தினர்.

அப்போது அந்த அங்கு 106 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, ரைஸ் மில் உரிமையாளரான பன்னீர்செல்வம் மகன் ஆறுமுகசாமி (50) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி