பூரிக்கட்டையால் கணவனை அடித்துக்கொன்ற மனைவி

70பார்த்தது
பூரிக்கட்டையால் கணவனை அடித்துக்கொன்ற மனைவி
கோவையில் பூரிக்கட்டையால் கணவனை மனைவி அடித்துக்கொன்றுள்ளார். இடிகரையைச் சேர்ந்தவர் கோழிக்கடை ஊழியர் நந்தகுமார் (33). மனைவி சஹானா பேகம் (30). காதல் திருமணம் செய்த இவர்களுக்கு, 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. நேற்று குடும்பத் தகராறில் நந்தகுமார், சஹானாவை அடித்துள்ளார். ஆத்திரமடைந்த சஹானா திருப்பி கணவரை பூரிக்கட்டையால் அடித்ததில் தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டு இறந்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் சஹானா பேகத்தை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி