பொதுமக்களிடம் "மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு!

81பார்த்தது
பொதுமக்களிடம் "மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு!
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிபபாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களிடம் "மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

அதன்படி இன்று (14. 07. 2024) சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பாமா பத்மினி தலைமையிலான போலீசார் சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் பொதுமக்களிடம் போக்சோ சட்டங்கள், காவல் உதவி செயலி, குழந்தை திருமண தடை சட்டம் உள்ளிட்டவை குறித்து ‘மாற்றத்தை தேடி" விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதுவரை 4055 "மாற்றத்தை தேடி" விழிப்புணர்வு கூட்டங்கள் காவல்துறையினர் மூலம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு சுமார் 1, 32, 375 பொதுமக்களிடம் தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு 36 வகையான கருத்துக்களை வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி