பிரேசிலில் 'எக்ஸ்' தளத்திற்கு தடை - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

68பார்த்தது
பிரேசிலில் 'எக்ஸ்' தளத்திற்கு தடை - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
பிரேசில் சுப்ரீம் கோர்ட்டில் 'எக்ஸ்' தளத்தில் கட்டுப்பாடின்றி தகவல்கள் வெளியாவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அலெக்சாண்டிரே டிமொரேஸ், பிரேசில் நாட்டில் 'எக்ஸ்' தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதியை அடுத்த 24 மணி நேரத்தில் நியமிக்க வேண்டும் என்றும், தவறினால் பிரேசிலில் 'எக்ஸ்' தளம் முடக்கப்படும் என்றும் உத்தரவிட்டார். இதனை எலான் மஸ்க் திட்டவட்டமாக மறுத்த நிலையில், பிரேசிலில் 'எக்ஸ்' தளத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி