“இது தான் முன்னுதாரணம்”.. பிரேமலதா சாடல்

65பார்த்தது
“இது தான் முன்னுதாரணம்”.. பிரேமலதா சாடல்
மெரினாவில் நேற்று (அக்.6) நடந்த விமான சாகசத்தை காண லட்சக்கணக்கானோர் திரண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலாதா விஜயகாந்த் கூறுகையில், “ சென்னை மெரினாவில் எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யவில்லை. அரசு அழைப்பு விடுத்தை நம்பி பொதுமக்களும் வந்துவிட்டனர். இது அரசின் நிர்வாக சீர்கேட்டிற்கான முன்னுதாரணம்” என விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி