21 குண்டுகள் முழங்க நாகை எம்பி உடல் நல்லடக்கம்

2251பார்த்தது
நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உடல்நல குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இயற்கை எய்தினார்.

மறைந்த செல்வராஜ் அவர்களின் உடல் நேற்று அவருடைய சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டம் சித்தமல்லி யில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து அவருடைய உடலுக்கு, திமுக மாநில பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் டி. ஆர். பாலு,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் டி. இராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய பூண்டி கலைவாணன், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் உணவு துறை அமைச்சர் ஆர். காமராஜ் முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பல கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் தொடர்ந்து நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்திய நிலையில் அவருடைய உடல் அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அவருடைய இல்லத்தின் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி