கோதண்டராமர் பிரகார வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

74பார்த்தது
திருவாரூர் மாவட்டம்
மன்னார்குடி அருகே வடுவூர் கோதண்டராமர் கோவிலில் புனர்பூசம் நட்சத்திரத்தை ஒட்டி கோதண்டராமர் பிரகார உலா நடைபெற்றது.
இதனை ஒட்டி கோதண்டராமர் திருக்கோலத்தில் சீதாதேவி தாயார் உடன் வில்லேந்திய திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதனைத் தொடர்ந்து கோதண்ட ராமர் சீதா தேவியுடன் உலா வந்தார். கொடி மரத்தின் முன்பு நிறுத்தப்பட்டு கும்ப தீப ஆரத்தி காட்டப்பட்டது.
பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் மற்றும் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி