மன்னையில் கொட்டும் மழையில் நனைந்தபடி தேரை இழுத்த பக்தர்கள்

52பார்த்தது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோவில் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும். இக்கோவில் பங்குனி பெருவிழா கடந்த மாதம் 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் ராஜகோபாலசுவாமி பல்வேறு அலங்காரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

 சூரியபிரபை, தங்க கருட சேவை, வெண்ணைத்தாளி உற்சவங்கள் நடைபெற்று முடிந்த நிலையில் 17வது நாளாக இன்று திரு தேரோட்டம் நடைபெற்றது. ருக்மணி சத்தியபாமா உடன் ராஜகோபால சுவாமி தேரில் எழுந்தருளினார். மாலை 3 மணி அளவில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவிலின் நான்கு வீதிகள் வழியாக தேர் சுற்றி வந்த போது மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து விழாவினர்.

தொடர்புடைய செய்தி