காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து ஆவடி நாசர் தேர்தல் பரப்புரை.

556பார்த்தது
திருவள்ளூர் நாடாளுமன்றம் தனி தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக கூட்டணி கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து திருவேற்காடு நகர திமுக சார்பில் நேற்று பிரச்சாரம் நடைபெற்றது.
திருவேற்காடு நகர திமுக சார்பில் நகர செயலாளர் நகர் மன்ற தலைவர் என். இ. கே. மூர்த்தி தலைமையில் தேர்தல் பணிமனை திறப்பு விழா நிகழ்ச்சி திருவேற்காடு பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஆவடி சா. மு. நாசர் எம்எல்ஏ தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியை காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், திருவேற்காடு நகர மன்ற துணைத் தலைவர் ஆனந்தி ரமேஷ், திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் லயன் டி ரமேஷ், திமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் பிரபு கஜேந்திரன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஏ ஜே பவுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் சசிகாந்த் செந்திலை ஆதரித்து பிரச்சாரம் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி