வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்தை ஆதரித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய முதல்வர், இத்தனை முறை இலங்கைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு கச்சத்தீவு பற்றி நினைவு வரவில்லையா? உச்ச நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கில் கூட, கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. மீட்க வேண்டுமானால் போர்தான் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கூறியது. இப்பொது தேர்தல் வந்தது நாடகமாடுகின்றனர் என கூறியுள்ளார்.