துணை ராணுவ படையினருக்கு விருந்துவைத்து வழியனுப்பி வைத்தனர்.

568பார்த்தது
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருத்தணி சட்டமன்ற தொகுதியில்   வாக்குப்ப்பதிவு  யொட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வகையில் 100க்கும் மேற்ப்பட்ட துணை ராணுவபடையினர் திருத்தணி தொகுதியில் 330 வாக்கு மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அமைதியான முறையில்  வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தேர்தலில் பதிவான மின்னணு வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்புடன் ராணிப்பேட்டையில் உள்ள கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந் நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட வந்திருந்த துணை ராணுவப்படையினருக்கு போலீசார் சார்பில் திருத்தணி காவல் தங்கும் விடுதியில் பிரியாணி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் டிஎஸ்பி விக்னேஷ் பயிற்சி டிஎஸ்பி தர்ஷிக்கா பங்கேற்று துணை ராணுவ படை வீரர்களுக்கு  பிரியாணி உணவு பரிமாறினர். இதனையேடுத்து துணை ரானுவ படையினரை போலீசார் வழியனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி