படை வீரர்கள் கையில் துப்பாக்கி ஏந்தியபடி  அணிவகுப்பு

2586பார்த்தது
திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அனைவரும் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் நடத்தப்பட்ட போலீசார் கொடி அணி வகுப்பில் துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை காவலர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படைப்பிரிவினர் என 90 பேர் பங்கேற்றனர்.

வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும்,   100 சதவிகித வாக்கை செலுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இன்று திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி  கமலா திரையரங்கத்திலிருந்து அரக்கோணம் சாலை,   ம. பொ. சி. சாலை உள்ளிட்ட திருத்தணி நகரின் முக்கிய வீதிகளில் துணை ராணுவப் படை வீரர்கள் கையில் துப்பாக்கி ஏந்தியபடி அணிவுகுப்பில் ஈடுபட்டனர்.

திருத்தணி  டிஎஸ்பி விக்னேஷ் தமிழ்மாறன், இன்ஸ்பெக்டர் மதியரசன், சப் இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி  உள்ளிட்ட காவலர்களும் இந்த அணி வகுப்பில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி