திருத்தணி அருகே பெண் தற்கொலை

80பார்த்தது
திருத்தணி அருகே பெண் தற்கொலை
திருத்தணி அடுத்த முருக்கம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா மனைவி லாவண்யா (34). இவருக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிய நிலையில், மூன்று மகன்கள் உள்ளனா். சில மாதங்களாக லாவண்யாவுக்கும், அவரது மாமியாா் நாகம்மாவிற்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் புதன்கிழமை லாவண்யா வீட்டில் இருந்த போது, வயல் வெளியில் இருந்து வீட்டிற்கு வந்த மாமியாா் நாகம்மா, லாவண்யாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதனால் மனமுடைந்த லாவண்யா திருத்தணி நகருக்கு வந்து பூச்சி மருந்து வாங்கிக் கொண்டு, பேருந்து மூலம் பீரகுப்பம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினாா். அங்கு லாவண்யா பூச்சு மருந்து குடித்து மயங்கி விழுந்தாா்.

அந்த வழியாக சென்றவா்கள் அவரை மீட்டு அருகே உள்ள பீரகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா் ஏற்கெனவே, லாவண்யா இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இது குறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி