சரக்கு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 500 கிலோ குட்கா பறிமுதல்

4009பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பொன்பாடி தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 24 மணி நேரமும் போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஆந்திராவிலிருந்து திருத்தணி நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர்.

அதில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட 500 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதனையேடுத்து ஓட்டுநரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் மயிலாடுதுறை மாவட்டம், தரக்கம்பாடி தாலுகாவை சேர்ந்த சதீஷ்குமார் என்பதும் அம்பத்தூர் பகுதிக்கு கொண்டு செல்ல இருப்பதும் தெரியவந்தது. 500 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி