மெத்தனால் கடத்திய நான்கு பேர் கைது

538பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான வடப்பேறுப்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கெமிக்கல் குடோனில் திடீரென போலீசார் சோதனைகளில் ஈடுபட்டனர்.

இதில் தடை செய்யப்பட்ட கெமிக்கல் பயன்படுத்துவதாக வந்த தகவலை அடுத்து திடீரென சோதனையில் ஈடுபட்ட செங்குன்றம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் 4 நபர்களை கைது செய்த நிலையில் அவர்களிடமிருந்து ஆய்வு செய்வதற்காக தடை செய்யப்பட்ட மெத்தனால் மற்றும் மூலப் பொருட்களை ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் நான்கு பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த கௌதம் மாதவரம் பகுதியைச் சேர்ந்த பான்ஜிலால் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் மற்றும் பரமசிவம் என்பது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் கள்ளச்சாராய விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் என்கின்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை அடுத்து இவர்கள் பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள மாதேஷ் என்பவருக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி