திருவேற்காடு கோவில்களுக்கு கும்பாபிஷேகம்

82பார்த்தது
திருவேற்காடு கோவில்களுக்கு கும்பாபிஷேகம்
விநாயகர் மற்றும் கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. சென்னை, அம்பத்துார் அடுத்த திருவேற்காடு, மாதிராவேடு பகுதியில், செல்வ விநாயகர் மற்றும் கருமாரியம்மன் கோவில்கள் அமைந்துள்ளன. அவற்றின் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. முன்னதாக, நான்காம் காலையாக பூஜையுடன் விழா துவங்கியது. கும்பாபிஷேகத்தின் போது பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி