வெள்ளியங்கிரியில் 9 ஆவது உயிரிழப்பு!

50பார்த்தது
வெள்ளியங்கிரியில் 9 ஆவது உயிரிழப்பு!
வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒன்பதாவது மலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி