வட சென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

1572பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் வட சென்னை அனல்மின் நிலையத்தில் தொழில்நுட்ப பிரிவில் ஏற்பட்ட பழது காரணமாக 600மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுயுள்ளது. அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் மொத்தம் 2 நிலைகள் உள்ளன.

இதில் முதலாவது நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதே போல இரண்டாவது நிலையில் உள்ள இரண்டு அலகுகளில் தலா 600 மெகா வாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டாவது நிலை இரண்டாவது அலகில் தொழில்நுட்ப பிரிவில் ஏற்பட்ட பழது காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுயுள்ளது.

பழுதினை சரி செய்யும் பணியில் அனல் மின் நிலைய அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளதாகவும் விரைவில் பழுது சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்கப்படும் என அனல்மின் நிலையம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி