பெங்களூரு நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு

66பார்த்தது
பெங்களூரு நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு
கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு உட்பட்ட 4 மக்களவைத் தொகுதிகளுக்கு இம்மாதம் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நான்கு மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு சதவீதம் எப்போதும் குறைவாகவே உள்ளது. இதுதவிர 50 ஆண்டுகளில் இல்லாத தண்ணீர் பிரச்னையை பெங்களூரு தற்போது சந்தித்து வருகிறது. இந்நிலையில், வேட்பாளர்கள் அந்தந்த பகுதிகளுக்கு சுதந்திரமாக சென்று ஓட்டு கேட்க முடியாத நிலை உள்ளது. ஐடி துறைகளில் அதிகளவில் பணியாற்றும் இளைஞர்கள் காலி குடங்கள் மற்றும் தண்ணீர் கேன்களுடன் வீதிகளில் அலைந்து திரியும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி