25 கிலோ குட்கா பறிமுதல் போலீஸ் விசாரணை

51பார்த்தது
கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் சோதனை சாவடியில் 25 கிலோ குட்கா பறிமுதல் இரண்டு இரு சக்கர வாகனங்களும் சிக்கியது.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனை நடத்தி வந்தனர் அப்போது ஆந்திர மாநிலத்தில் குறைந்த விலைக்கு வாங்கி தமிழகத்தின் எல்லையோர பகுதியான கும்மிடிப்பூண்டி கவரப்பேட்டை தச்சூர் ஆரணி மாதர்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 25 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தலில் ஈடுபட்ட சென்னை செங்குன்றத்தைச் சார்ந்த கோபிநாத் (வயது 35) ஆந்திர மாநிலம் நெல்லுறை சார்ந்த நாராயணன் (வயது 36) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேபோல் நேற்று முன்தினம் பொன்னேரியைச் சேர்ந்த கதிர்வேல் (வயது 45) என்பவரிடம் 30 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவர்கள் பயன்படுத்திய மூன்று இரு சக்கர வாகனங்களும் பரிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி